தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் உள்ள மதுபான விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 63 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட இந்த தீ விபத்தில், புகை மூட்டத்தால் சிக்கிய பலர் வெளியேற முடியாமல் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 22 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குளிரூட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது, அவசர வெளியேறும் வழிகளில் தடைகள் காணப்பட்டதாகவும், இதனால் மக்களை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
