நாட்டின் பல பகுதிகளில் நேற்று (12) இடம்பெற்ற பல்வேறு வாகன விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மொனராகலை பகுதியில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.
கண்டி – யாழ்ப்பாணம் பிரதான வீதியின் கோவிபல சந்தி பகுதியில் பஸ் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிவேரிய – பியகம வீதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹொரணை – மீபே வீதியில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் பின்னால் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – மன்னார் வீதியில் பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பின்னால் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துகள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
