Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனவுக்கு விளமறியல்!

Parliament Member | Ramanathan Archuna | Land Issue | Police | Quick Tamil News

சித்திரை 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் துப்பாக்கிமுனையில் பெண்ணொருவரை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்ட நிலையில், மல்லாகம் நீதவான் நீதிமன்றம் அவரை எதிர்வரும் 29 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் (25) சனிக்கிழமை யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பாக ஏற்பட்ட தகராறே இதற்குக் காரணமாகும்.

குறித்த காணியை பாராளுமன்ற உறுப்பினர் துப்பரவு செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த இரண்டு பெண்கள் அந்த காணி தமக்குச் சொந்தமானது என உரிமை கோரியுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் துப்பாக்கியைக் காட்டி ஒரு பெண்ணை அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பந்தப்பட்ட காணியின் உரிமை தொடர்பாக ஏற்கனவே நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அந்த காணி தனக்குரியது என உரிமை கோரி வரும் நிலையில், மற்றொரு தரப்பு அதனை எதிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

மாலைத்தீவு ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம்!

வைகாசி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராகப் போலித் தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

வைகாசி 7, 2026
இலங்கை

டிஜிட்டல் அடையாள அட்டை மோசடி : ஆட்பதிவுத் திணைக்களத்தின் எச்சரிக்கை!

ஆனி 11, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய மீனவர்கள் 30 பேர் விடுதலை!

ஆனி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube