இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ட்ரோன் விமான சேவையை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கான உத்தேச வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஒரு ட்ரோன் விமானத்தில் ஒரே நேரத்தில் 6 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் எனவும், சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் இத்தகைய சேவைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
