கலாவெல தேசிய பூங்காவின் புகழ்பெற்ற “தீக தந்து” தந்த யானை சட்டவிரோத உயர் அழுத்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தில், சந்தேகநபருக்கு எதிராக பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தயாராகியுள்ளனர்.
யானையின் மதிப்பீட்டு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டதுடன், தந்தங்களையும் சான்றுப் பொருளாக முன்னிலைப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
2024 நவம்பர் 27ஆம் திகதி ஆண்டியகல பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்ட மாரடைப்பே மரணத்திற்குக் காரணம் என பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு ஆகஸ்ட் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது
