மாத்தளை காவல்பிரிவின் அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (24) கூர்மையான ஆயுதத்தால் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில், மாத்தளை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவர் அதிரஹபிட்டிய பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் தனது மகனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக மகன் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 33 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து மாத்தளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
