வடக்கு, சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் நோக்கில் காங்கேசன்துறை சந்திப்பகுதியை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மாகாண அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டின் கீழ் “Clean North” எனும் செயற்திட்டத்தினூடாக காங்கேசன்துறை சந்தியை அழகுபடுத்தும் முகமாக வீதியோர நடைபாதை அமைக்கும் வேலைத்திட்டம் ஒரு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறித்த வேலைத்திட்டத்தை வடமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெகநாதன் விவேகானந்தன், தேசிய மக்கள் சக்தியின் காங்கேசன்துறை அமைப்பாளர் பிரகாஸ், வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் நேரில் பார்வையிட்டனர்.
