எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி நீர்க்கட்டண மீளாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
வருடத்திற்கு இருமுறை நீர்க்கட்டணங்கள் திருத்தத்திற்கு உட்படுத்தப்படும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கமைய ஜூன் 30ஆம் திகதி நிலவும் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு நீர்க்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.
