பாணந்துறை – வாலனை மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில்,ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
517 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தன் வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பாணந்துறை பகுதியை சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார். பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
