மத்திய மலைநாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (15) வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுத்துள்ளார்.
ஹட்டன் பகுதியில் நிலவும் கடும் மழை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
