நாட்டின் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நாளை (16) மாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.
இ தன்படி, பதுளை,கொழும்பு காலி கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை, மொனராகலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, மலைச்சரிவுகளில் திடீர் வெடிப்புகள் ஏற்படுதல், நிலம் உள்வாங்குதல், மரங்கள் சாய்வடைதல் அல்லது புதிய ஊற்றுகள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அது குறித்து அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
