மலையக பெருந்தோட்ட பகுதிகளில் கடந்த காலங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பேரனை ஒன்றை முன்னெடுப்பதற்கான கடிதம் இன்று கையளிக்கப்பட்டது.
இதன்போது மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுற உறுப்பினருமான பழனி திகாம்பரம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயன்த கருணாதிலக்க ஆகியோர் இணைந்து சபா நாயகரிடம் இந்த கடிதத்தை கையளித்துள்ளனர்.
