இலங்கையில் தற்போது மூவரில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தினால் (Hypertension) பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் பதிவாகும் மொத்த மரணங்களில் சுமார் 34 சதவீதமானவை உயர் இரத்த அழுத்தம் தொடர்பான நோய்களினாலேயே ஏற்படுவதாக தொற்றா நோய் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எனவே, 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தவறாமல் தமது இரத்த அழுத்தத்தை முறையாகப் பரிசோதித்துக் கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையர்களின் உயர் இரத்த அழுத்த பாதிப்பிற்கு, உணவில் அதிகளவிலான உப்பைச் சேர்த்துக்கொள்ளும் பழக்கம் ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
