ஹொரனை, மூணகம சந்திக்கு அருகில், மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இரவு வவுலகல நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளே, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி, ஹொரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் நாகொட, போம்புவல பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய முதியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஹொரனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
