பழனி அடிவாரம் திரு ஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் பெண் பக்தர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதுடன், தனது தொலைபேசியில் தவறாக காணொளிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இம்மானுவேல் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயிலில் காணப்பட்ட கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, தரிசன வரிசையில் நின்றிருந்த பெண்களிடம் இவர் தவறான முறையில் நடந்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை அவதானித்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அந்த நபரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரது தொலைபேசியை சோதித்த காவல்துறையினர், அவர் பெண்களை தவறான காணொளிகளை எடுத்ததை உறுதிசெய்தனர்.
இதனை அடுத்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
