எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், இந்தியாவிற்கு வருகை தந்த உகாண்டா நாட்டுப் பெண் ஒருவர் பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவருக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் தெற்காசிய நாடொன்றில் பதிவாகும் முதலாவது எபோலா தொற்றுச் சம்பவமாக இது அமையும்.
எபோலா வைரஸ் பரவலை சர்வதேச கவனத்திற்குரிய உலகளாவிய பொதுச் சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்த நோய் தொற்றிய எவரும் இந்தியாவில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என இந்திய சுகாதார அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா தெரிவித்து ஒரு நாளின் பின்னரே இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.
