தெற்கு லெபனானின் ‘டயர்’ (Tyre) நகரில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.
இந்த கோரத் தாக்குதலில் காரில் இருந்த ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களில் ‘டூரா’ (Toura) நகரத்தைச் சேர்ந்த அலி முகமது தஹினி (Ali Muhammad Dahini) மற்றும் அவரது மகன் ரபிஹ் (Rabih) ஆகியோரும் அடங்குவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்த இடத்திற்கு விரைந்த லெபனான் சிவில் பாதுகாப்புப் படையினரும், அல்-ரிசாலா அவசர மருத்துவக் குழுவினரும், பலியானவர்களின் உடல்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் மட்டும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லையில் மோதல் தீவிரமடைந்து வருவதால் அப்பகுதியில் கடும் போர்க்காலச் சூழல் நிலவுகிறது.
