மட்டக்களப்பு – திராய்மடு பகுதியில் வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) இரவு 10.00 மணிக்கு எரிவாயு சிலிண்டர் தீப்பற்றியதையடுத்து, வீட்டின் உரிமையாளர் புத்தி சாதுரியமாக தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
வீட்டின் உரிமையாளர் எரிவாயுவை பயன்படுத்தி உணவு தயாரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த போது , சிலிண்டரில் இருந்து வரும் குழாயில் கசிவு ஏற்பட்டதையடுத்து தீப்பற்றியுள்ளது.
அயலவர்கள் மாநகரசபை தீயணைப்பு பிரிவுக்கு அறிவித்ததையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர். எனினும் வீட்டு உரிமையாளர் புத்திசாதுரியமாக விரைந்து செயற்பட்டு தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
