ஈரானிய ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளானதை அடுத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தின் பணிகள், அதன் 4ஆவது முனையத்தில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேற்கொள்ளப்பட்ட சேத விபர மதிப்பீடுகளின் பின்னர், வானூர்தி நிலையத்தின் பாதுகாப்புத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குவைட் வானூர்தி நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த ஆரம்பக் கட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்களில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 63 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் ட்ரோன் தாக்குதலுக்குப் பின்னர் குவைத் பிரதமர் விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்
இந்த ஆய்வின் போது, சம்பவத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பொருள் சேதங்களை அவர் ஆய்வு செய்தார். மேலும், முனையத்தின் செயல்பாடுகளை விரைவில் செயல்படுத்துவதற்காக, உடனடி பழுதுபார்ப்பு மற்றும் புனரமைப்புப் பணிகளைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்
