இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் (SLC) ‘கிரிக்கெட் மறுவடிவமைப்பு குழு’, அண்மையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை சந்தித்து கலந்துரையாடியது.
கிரிக்கெட் மறுவடிவமைப்பு குழுவின் தலைவர் திரு. எரான் விக்ரமரத்ன தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேசிய அணி, இலங்கை ‘ஏ’ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணியின் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பில் குழுவின் ஏனைய உறுப்பினர்களான இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் கௌரவ செயலாளர் திரு. பிரகாஷ் ஷாஃப்டர், கிரிக்கெட் குழுவின் தலைவர் திரு. சிதத் வெத்திமுனி, திரு. ரொஷான் மஹானாம மற்றும் திரு. குமார் சங்கக்கார ஆகியோரும் பங்கேற்றனர்.
அவர்களுடன், கிரிக்கெட் மறுவடிவமைப்பு குழுவின் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி திரு. தினால் பிலிப்ஸ், ஜனாதிபதி சட்டத்தரணி திரு. உபுல் குமாரப்பெரும, செல்வி. அவந்தி கொலம்பகே மற்றும் திரு. துஷிர ரத்தெல்ல ஆகியோரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. ஆஷ்லி டி சில்வா மற்றும் இலங்கை தேசிய பெண்கள் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் திரு. ஜேமி சிடன்ஸ் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
