ஹொரண மக்கள் வங்கியிலிருந்து 35 மில்லியன் ரூபா ( 3.5 கோடி ரூபா) காணாமல் போனமை தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியவில் வைக்கப்பட்டுள்ள வங்கியின் உதவி முகாமையாளரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க ஹொரண தலைமை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் வங்கியின் ATM இயந்திரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பணத்திற்கும் வங்கியின் சேமிப்பகத்தில் கண்டெடுக்கப்பட்ட பணத்திற்கும் உள்ள கணக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே பொலிஸ் விசாரணையில் பல்வேறு பெண்களிடமிருந்து கந்துவட்டி அடிப்படையில் பெற்ற பணத்திற்கான வட்டியைச் செலுத்துவதற்கும் வேறு நபர்களுக்கு வட்டிக்குப் பணம் கடன் கொடுத்திருப்பதும், தனக்கு நெருங்கிய மொடல்கள் பெண்கள் நைட் கிளப் போன்றவற்கு சென்று அங்கு பல இளம் பெண்களுக்காகப் பெருமளவு பணத்தைச் செலவழித்திருப்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விடக் குறைவான பணத்தையே அவர் ATM இயந்திரங்களில் வைப்புச் செய்துவிட்டு, மீதிப் பணத்தை நீண்ட காலமாகத் தம்வசம் இரகசியமாக வைத்திருந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
