ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பிலான விசாரணை நேற்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நேற்று நடைபெற்ற விசாரணையில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் எம். உதேஷ் தமயந்த, குற்றபுலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் சேனாதீர டி சில்வா மற்றும் பொலிஸ் சிசிடிவி பிரிவின் கான்ஸ்டபிள் மதுஷ சமீர சம்பத் ஆகியோர் சாட்சியமளித்தனர்.
இதன்போது கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர், சாட்சியங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு மேலும் அவகாசம் தேவை எனவும், அடுத்ததாக மேலும் இரு சாட்சிகளை அழைக்கவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மன்றில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களைப் பரிசீலித்த நீதிவான் 28 ஆவது சாட்சியை எச்சரித்திருந்ததுடன், மேற்படி வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உத்தரவிட்டிருந்தார்.
