லங்கா சதொச நிறுவனம் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த புதிய விலைக் குறைப்பு இன்று (10) முதல் அமுலுக்கு வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் யுத்த சூழ்நிலையால் உருவான உலகளாவிய பொருளாதார சவால்களுக்கு மத்தியில், மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் நோக்கில் அரசாங்கத்தின் நேரடி தலையீட்டின் கீழ் இந்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
