நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏத்துகல கடற்பரப்பில் நேற்று புதன்கிழமை (10) மாலை நீராடச் சென்ற இளைஞர் ஒருவர், கடல் நீரோட்டத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட போது கடற்பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டவர் ஆடியம்பலம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் என தெரியவந்துள்ளது.
இளைஞர் கடலில் அடித்துச் செல்லப்படுவதைக் கண்ட பொலிஸ் உயிரிகாப்பு பிரிவின் அதிகாரிகள் உடனடியாகச் செயற்பட்டு அவரைப் மீட்டு, அடிப்படை முதலுதவிகளையும் வழங்கியுள்ளனர்.
