Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் காணாமல்போனமை குறித்த அறிக்கை: கோப் குழு பரிசீலனை!

ஆனி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரச கடன்களைத் தீர்ப்பதற்காக திறைசேரியின் வசம் இருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல்போனமை தொடர்பாக நிதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து ஆராய்வதற்காக, அரச நிதி பற்றிய குழு (COPF) இந்த வாரம் (08) நாடாளுமன்றத்தில் கூடியது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை கணினி அவசரப் பதில் பிரிவின் (CERT) அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின் போது, நிதி அமைச்சின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்த பின்னர், இது தொடர்பான தனிப்பட்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக மத்திய வங்கி அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

இரு அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இவ்வமர்வில் பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கௌசல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பாலிஹேன, சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிமடை- டயரபா பகுதி தொழிலாளர் ஒருவர் தோட்ட உதவி அதிகாரி ஒருவரினால் தாக்கப்பட்டார்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அடுத்த ஜனாதிபதி திலித் ஜயவீரவே – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்!

வைகாசி 9, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

சென்னை கோயம்பேட்டில் இலங்கை இளம்பெண் கார் ஏற்றி கொலை…

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஒயா – கார்லபேக் டிவிசன் ஆலய புனர்நிர்மான பணிகளுக்கான உதவி கோரல்!

ஆனி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube