ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இணையவழி சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பான தகவலை திணைக்களம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதுடன், அதனால் இணையத்தளத்தின் சில சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, ரயில்களின் நேர அட்டவணை மற்றும் பயண விபரங்களை பொதுமக்கள் பார்வையிடும் பகுதி தற்போது செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த இணையத்தளத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
.
