உடவளவை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் இன்று (17) 13 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
உடவளவை நீர் வழங்கல் திட்டத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதன் காரணமாக இந்தத் தற்காலிக நீர்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உடவளவை நகரம் மற்றும் RET நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்வெட்டினால் ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
