பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், அரச அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் நேற்றைய தினம் (17.06.2026) கேகாலை மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
பெருந்தோட்ட பகுதிகளில் மண் சரிவு, தீ விபத்து, மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வீடுகள் சம்பந்தமாகவும் இந்திய வீட்டு திட்டம் தொடர்பாகவும் நிர்மாணிக்கப்படுகின்ற வீடுகளின் நிர்மாண பனிகளின் தாமதம் குறித்தும்விரிவாக கலந்துரையாடப்பட்டது.
தொடர்ந்து கேகாலை மாவட்டத்தில் சேவையாற்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் PCCF உத்தியோகஸ்தர்களுக்கிடையிலான கலந்துரையாடலும் இதன்போது இடம்பெற்றது .
