கொழும்பு – ரத்மலானை பகுதியில் வீடுகளுக்குள் நுழைந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவர், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மொரட்டுமுல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவிற்கு நேற்று (17) கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ரத்மலானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் மொரட்டுவ மற்றும் பிலியந்தலை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட ஒரு கைத்தொலைபேசி, 25 செப்புக் குழாய்கள் மற்றும் தங்க வளையலை அடகு வைத்தமைக்கான பற்றுச்சீட்டு ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
