மஹர பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை (19) காலை முதல் நாளை (20) காலை 8.00 மணி வரை அவசர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தச் சபை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், கடவத்தை மத்திய அதிவேக வீதிக்கு அருகில் உள்ள பிரதான நீர் விநியோகக் குழாயில் ஏற்பட்ட திடீர் முறிவு காரணமாகவே இந்த அவசர நீர் வெட்டு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
