யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில், இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் லான்ஸ் கோப்ரல் எம்.ஆர். ராஜாவிற்கு புதிய வீடு நிர்மாணிக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (23) காலை நடைபெற்றது.
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வு, இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டது.
15 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வீடு, எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி பயனாளியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் சர்வமத தலைவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி, கோப்பாய் பிரதேச செயலாளர், இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், வட மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
