முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அரசாங்கத்தின் “க்ளீன் ஸ்ரீலங்கா” செயற்திட்டத்தின் பணிப்பாளரும், ஜனாதிபதியின் நெருங்கிய ஆலோசகருமான கிரிசாந்த குரே ஆகியோர் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 4ஆம் திகதி மாலை, ப்ளவர் வீதியில் அமைந்துள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும், அது சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அநுர குமார திசாநாயக்க அவர்களின் ஒப்புதலுடனேயே இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகின்றது. எனினும், சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பான எந்த உத்தியோகபூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
அதேவேளை, இரு தரப்பினருக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாகவும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஆலோசனை மற்றும் வேண்டுகோளின் பேரிலேயே அது இடம்பெற்றதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
