கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இன்று (07) இலங்கை பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை உத்தியோகபூர்வமாகச் சந்தித்தார்.
சபாநாயகர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, இராணுவ மரபுகளுக்கு அமைவாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் இலங்கை கடற்படையின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இருதரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
இதன்போது நினைவாக கடற்படைத் தளபதி மற்றும் சபாநாயகர் ஆகியோர் பரஸ்பரம் நினைவுப் பரிசுகளை வழங்கிக் கொண்டனர்.
