இந்தியா – ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை (23) ஹராரேவில் ஆரம்பமாகவுள்ளது.
ஸிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை வழிநடத்த உள்ள அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர், முன்னாள் வீரர்களான எம்.எஸ். தோனி மற்றும் சுரேஷ் ரெய்னாவின் முக்கிய சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக எம்.எஸ். தோனி 52 சிக்ஸர்கள் அடித்துள்ளார். தற்போது ஸ்ரேயாஸ் ஐயர் 51 சிக்ஸர்களுடன் உள்ளார். இந்த தொடரில் ஒரு சிக்ஸர் அடித்தால் தோனியின் சாதனையை சமன் செய்வார். மேலும், 2 சிக்ஸர்கள் அடித்தால் தோனியை பின் தள்ளி ஸ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனையைப் படைப்பார்.
அதேபோல், சுரேஷ் ரெய்னா இந்தியாவுக்காக சர்வதேச டி20 போட்டிகளில் 58 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் 8 சிக்ஸர்கள் அடிக்கும் பட்சத்தில், ரெய்னாவின் சாதனையையும் முறியடித்து, இந்திய வீரர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் 12-வது இடத்திற்கு முன்னேறுவார்.
இந்திய அணி ஏற்கனவே ஸிம்பாப்வே சென்றடைந்துள்ள நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் இந்த சாதனைகளை படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
