டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 2,02,025 விவசாயிகளுக்கு ரூ.12,341.5 மில்லியன் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த 1,48,000 ஏக்கர் நெற்பயிர்களுக்கு 1,16,278 விவசாயிகளுக்கு ரூ.8,888.5 மில்லியன் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மகாவலி பகுதிகள், மாகாணங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான பகுதிகளில் சோளம், மரக்கறி உள்ளிட்ட வயல் பயிர்களை பயிரிட்ட 85,747 விவசாயிகளுக்கு ரூ.3,453 மில்லியன் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
இழப்பீட்டு திட்டத்தின் கீழ், நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.1,50,000 மற்றும் சோளம், மரக்கறி உள்ளிட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,00,000 வீதம் இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
