அமெரிக்கா புதன்கிழமை தெற்கு ஈரானில் புதிய வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. துறைமுக நகரமான பந்தர் அப்பாஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, இடைக்கால போர் நிறுத்தம் முடிவடைந்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு வெளியிட்ட தகவலின்படி, 80-க்கும் மேற்பட்ட ஈரானிய இராணுவ இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன. இதில் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் நிலையங்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை நிலைகள் அடங்குகின்றன.
இதற்கு பதிலளித்த ஈரான், பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
இந்த மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளதால், மத்திய கிழக்கில் பிராந்தியப் போர் வெடிக்கும் அபாயமும், ஹோர்முஸ் நீரிணை ஊடான உலக எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அச்சமும் அதிகரித்துள்ளது.
