வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டிலிருந்தே வாக்களிக்கும் உரிமை மற்றும் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும், உயிரிழக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு ரூ.6 இலட்சத்திலிருந்து ரூ.20 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
