தீயணைப்பு படையின் அவசர தொலைபேசி இலக்கம் தற்காலிகமாக செயலிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
இதனால், தீ விபத்துகள் தொடர்பான அவசர தகவல்களை வழங்க பொதுமக்கள் 117 என்ற அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தீயணைப்பு படையின் அவசர இலக்கம் மீளச் சீரமைக்கப்படும் வரை 117 இலக்கம் ஊடாக தீ விபத்து தொடர்பான அழைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
