வவுனியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரட்டப்பெரியகுளம் – வவுனியா வீதியில் நேற்று (17) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில், வவுனியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரட்டப்பெரியகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த அவர், 16ஆம் ஒழுங்கைக்கு அருகில் வீதியின் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லொறியுடன் மோதியதில் பலத்த காயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த அவர் உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், வழியிலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மாத்தளை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என்றும், வவுனியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சார்ஜன்டாக பணியாற்றி வந்தவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
