33வது ஆசிய பிராந்திய கூட்டமைப்புப் பேச்சுவார்த்தை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நட்பு மற்றும் கூட்டுறவு ஒப்பந்தத்தின் 50 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், இன்று (22) புதன்கிழமை பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரைச் சென்றடைந்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் விஜித்த ஹேரத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில்
இந்தப் பயணம் ஆசிய பிராந்திய கூட்டமைப்பு மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகளுடனான இலங்கையின் ஆக்கப்பூர்வமான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும் ஆழப்படுத்துவதையும் உறுதிப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனும் அவர் இருதரப்புச் சந்திப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
