போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘தெஹிபாலே மல்லி’ என்பவருக்கு, ‘கஞ்சிபான இம்ரான்’ எனக் கூறிக்கொள்ளும் நபரொருவர் விடுத்துள்ள புதிய மிரட்டல் தொடர்பான காணொளி மற்றும் அதற்கு தெஹிபாலே மல்லி பதிலளிக்கும் குரல் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.
இந்நிலையில், இன்று(23) ஆரம்பமாகும் தெவிநுவர தேவாலயத்தின் ஊர்வலத்துக்காக பாதுகாப்பு வழங்குமாறு கோரியும், தனக்கு விடுக்கப்பட்டுள்ள மிரட்டல்கள் தொடர்பாகவும் தெவிநுவர தேவாலயத்தின் மற்றும் கதிர்காம தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமேவான திலின மதுசங்க, மாத்தறை வலய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார்.
இவ்வாறான பதற்றமான சூழலில், தெவிநுவர தேவாலயத்தின் ஊர்வலம் இன்று (23) பிற்பகல் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாத்தறை வலய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஊர்வலத்தில் பாதுகாப்புக்காக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
