Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிக விலைக்குக் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த ஹோட்டலுக்கு 10 இலட்சம் ரூபா அபராதம்!

ஆடி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பண்டாரவளை, கரந்தகொல்ல, எல்ல பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்குக் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தமைக்காக பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் 10 இலட்சம் ரூபாவை தண்டப்பணமாக விதித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபையின் புலனாய்வு அதிகாரிகள் கடந்த 10 ஆம் திகதி குறித்த ஹோட்டலில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டக் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்குக் குடிநீர் போத்தல்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட விதிகளின் கீழ் பதுளை மாவட்ட அதிகாரிகளால் தொடரப்பட்ட இவ்வழக்கு, கடந்த ஜூலை 22 ஆம் திகதி பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குறித்த ஹோட்டல் நிர்வாகம் தன் மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டது.

குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் அந்நிறுவனத்திற்கு ரூ. 10 இலட்சம் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறி அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்யும் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ஏனைய வணிக நிறுவனங்கள் குறித்துத் தகவல் தெரிந்தால், வேலை நேரங்களில் 1977 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறி அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்யும் ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ஏனைய வணிக நிறுவனங்கள் குறித்துத் தகவல் தெரிந்தால், வேலை நேரங்களில் 1977 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு முறைப்பாடு செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

அத்துருகிரிய விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழப்பு

ஆனி 5, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

AIக்கு இணைய அணுகல் கிடைத்தால் ஏற்படும் மாற்றம்

ஆவணி 6, 2026
இலங்கை

QR முறை மூலம் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு உர மானியம்!

சித்திரை 10, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அண்ணாமலையை தொடர்ந்து புதிய இயக்கத்தை ஆரம்பித்த சுப்பர் ஸ்டாரின் மனைவி!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube