முன்னாள் அமைச்சர் விமல் வீரசன்சவின் சகோதரர் சரத் வீரசன்சவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (28) பிணை வழங்கியுள்ளது.
அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர் கடந்த ஜூலை 15ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பிணை கோரிக்கை தொடர்பில் இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, சரத் வீரசன்சவை கைது செய்வதற்காக பொலிஸார் பாணந்துறை பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற போதிலும், அப்போது அவர் அங்கு இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில், கம்பஹா பகுதியில் வைத்து நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர் அவரை கைது செய்திருந்தனர்.
