கிழக்கு ஆபிரிக்க நாடான உகண்டாவில் பரவிய எபோலா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நாடு எபோலா அற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கிறிஸ் பாரியோமுன்சி தெரிவித்துள்ளார்.
மே மாத நடுப்பகுதியில் ஆரம்பமான இந்தத் தொற்றால் 20 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 18 பேர் சிகிச்சையின் பின்னர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்த இருவர் கொங்கோ ஜனநாயகக் குடியரசைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி உள்ளூர் நோயாளர் ஜூன் 16ஆம் திகதி குணமடைந்ததைத் தொடர்ந்து, 42 நாட்களாக புதிய தொற்றுகள் எதுவும் பதிவாகாத நிலையில், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களுக்கு அமைய உகண்டா எபோலா அற்ற நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எபோலா பரவலின் முக்கிய மையமாக விளங்கும் கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
