ஜேர்மனியின் பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான BMW, வரும் 2027ஆம் ஆண்டுக்குள் ஜேர்மனியில் மட்டும் சுமார் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இன்று (30) தனது இரண்டாம் காலாண்டு நிதி நிலை அறிக்கையை வெளியிடவுள்ள நிலையிலேயே இந்நிறுவனம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
மின்சார வாகனங்களுக்கான அதிக உற்பத்திச் செலவு, சீன நிறுவனங்களின் கடும் போட்டி மற்றும் அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் போன்ற பொருளாதாரச் சவால்களே இதற்கு காரணம்.
ஆட்குறைப்பு நடவடிக்கைகள் பிரதானமாக நிர்வாகப் பிரிவு மற்றும் ஆராய்ச்சி-மேம்பாட்டு (R&D) பிரிவுகளிலேயே மேற்கொள்ளப்படும்.
உற்பத்திப் பிரிவில் (Production sector) பணிபுரியும் ஊழியர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் வாகனத் துறையில் நிலவும் நெருக்கடியால், ஏற்கனவே வோக்ஸ்வேகன் மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
