அவசர மருத்துவ உதவியை நோயாளர்களுக்கு மேலும் விரைவாக வழங்கும் நோக்கில், 1990 சுவசெரிய அறக்கட்டளை மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான அவசர மருத்துவ பதிலளிப்பு சேவையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது.
கடும் போக்குவரத்து நெரிசல் அல்லது சாலைத் தடைகள் காரணமாக அவசர ஊர்திகள் தாமதமாகும் பகுதிகளில், நோயாளர்களை விரைவாகச் சென்றடைந்து முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ சேவைகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
கொழும்பு உள்ளிட்ட அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படும் நகர்ப்புறங்களில் முதற்கட்டமாக இந்த சேவை செயல்படுத்தப்படவுள்ளது.
சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் அவசர மருத்துவ உபகரணங்களுடன் கூடிய மோட்டார் சைக்கிள்களில் சேவையாற்றவுள்ளனர்.
இந்த முன்மாதிரி திட்டம் இந்த ஆண்டின் இறுதிக்குள் கொழும்பு மற்றும் பிற நகர்ப்புறங்களில் ஆரம்பிக்கப்படும் என சுவசெரிய அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
