கிராமிய வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் I Road 2 திட்டத்தின் கீழ், 1.57 கிலோமீற்றர் நீளமுடைய கோப்பாய் – மோதர்கேணி வீதியின் புனரமைப்புப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், அப்பகுதி மக்களின் நீண்டகால போக்குவரத்து தேவைக்கு தீர்வாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புனரமைப்பின் மூலம் பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்து வசதி உறுதிப்படுத்தப்படுவதுடன், கல்வி, விவசாயம், வர்த்தகம் மற்றும் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகளுக்கும் ஊக்கம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அங்குரார்ப்பண நிகழ்வில் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன, தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
