சீரற்ற காலநிலை காரணமாக கடுகண்ணாவை மற்றும் கணேதென்ன பகுதிகளுக்கு இடையிலான கொழும்பு – கண்டி பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக வீதியில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மறு அறிவித்தல் வரும் வரை குறித்த வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
