2026 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் 86,947 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை டெங்கு காரணமாக 62 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழப்பு வீதம் 0.07 சதவீதமாக காணப்படுகின்றது.
ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,975 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தின் முதல் நாட்களில் 1,598 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியில் கம்பஹா (18,464) மற்றும் கொழும்பு (17,187) மாவட்டங்களில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், மேல் மாகாணம் மொத்த பாதிப்பில் 52.9 சதவீதத்தை கொண்டுள்ளது.
மழைக்கால நிலைமையால் நுளம்பு பெருக்கம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதால், பொதுமக்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
