எத்தியோப்பியாவின் அம்ஹாரா பிராந்தியத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றுக்கு அருகில் ஏற்பட்ட மண்சரிவில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கும் பணிகளில் மீட்புக் குழுவினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
எத்தியோப்பியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதி பிரதான மழைக்காலமாக காணப்படுவதுடன், கடும் மழையினால் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
